Featured Post Today
print this page
Latest Post

இலங்கையர்கள் கனடிய விஸா பெறுவதற்கு புதிய விதி முறைகள்!

கனடா விஸா பெறுவதற்காக விண்ணப்பிக்கும் சில நாடுகளைச் சேர்ந்தவர்கள், இந்த வருடக் கடைசியிலிருந்து சில புதிய நிபந்தனைகளை(Biometrics Requirements) பூர்த்தி செய்வது அவசியமாகும். அந்த நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஏனைய நாடுகள் அப்பேனியா, அல்ஜீரியா, கொங்கோ ஜனநாயகக் குடியரசு, எரித்திரியா, லிபியா, நைஜீரியா, சவூதி அரேபியா, சோமாலியா, தென்சூடான், சூடான், துனூசியா என்பன உட்பட மேலும் சில நாடுகளாகும்.

இந்த புதிய நிபந்தனைகளின்படி, ஒருவர் தனது விரல் அடையாளங்கள், புகைப்படங்கள் என்பனவற்றை கட்டாயமாகச் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான
செலவாக மேலதிகமாக 85 கனடிய டொலர்களையும் செலுத்த வேண்டும்.

கடந்த காலங்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குற்றவாளிகள் கனடாவுக்குள் வந்துள்ளதை பின்னர் கனடிய அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். அதன்
காரணமாகவே இந்தப் புதிய விதிமுறைகளின் மூலம் கனடாவின் குடியேற்ற முறைமையைப் பாதுகாக்க முடியும் என கனடிய அரசு கருதுகிறது.

விருந்தினர்கள், தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்கள், மாணவர்கள் என கனடிய விஸாவுக்கு விண்ணப்பித்துள்ள 3 இலட்சம் பேரில் 20 வீதத்தினர் இந்த விதிமுறை அமுல் செய்யப்பட்ட முதல் வருடத்தில் தமது சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டி இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் குழந்தைகள், வயோதிபர்கள், இராஜதந்திரிகள் போன்றோருக்கு இந்த நடைமுறையிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

0 comments

மகனை முதலமைச்சராக்கும் பிரதமர் தி. மு. ஜயரத்னவின் கனவுக் கோட்டை தகர்ந்தது.

மத்திய மாகாண சபைத் தேர்தலில் வெற்றியீட்டிய ஆளுங்கட்சியில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவரான பிரதமரின் மகன் அனுருத்த ஜயரட்னவுக்கு முதலமைச்சர் பதவியோ வேறு அமைச்சர் பதவியோ வழங்கப்படவில்லை. அதே போல வட மேல் மாகாண சபையில் இரண்டாவது அதிகூடிய வாக்குகளைப் பெற்ற அமைச்சர் ஜோண்ஸ்டன் பெர்ணான்டோவின் மகன் ஜொகான் பெர்ணாண்டோவுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

அதேவேளை, வடமேல் மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அதுல விஜேசிங்க தான் மாகாண சபையில் பதவி எதையும் கோரவில்லை என்று கூறியுள்ளார்.

மறைந்த ஜனாதிபதி பிரேமதாச பிரதமராக இருக்கும் போது கூறினார் ஜனாதிபதி நிர்வாக முறையில் பிரதமர் பதவி பியோன் பதவிக்குச் சமமானது என்று. அது உண்மைதான். பாவம் இன்றைய பிரதமர் தி.மு.ஜ.

0 comments

இராணுவம் வரம்பு மீறிச் செயல்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு கம்பகா வெலிவேரியாவில் தொழிற்சாலையொன்றின் கழிவு நீரால் குடிநீர் மாசடைந்தமைக்கு எதிராக பாதிக்கப்பட்ட பிரதேசவாசிகளால் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்தது தெரிந்ததே. அது தொடர்பாக விசாரணை செய்வதற்கு இராணுவ கட்டளைத் தளபதி லெப். ஜென. தயா ரட்னாயக்காவால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு குறித்த வெலிவேரியா ரத்துபஸ்வெல துப்பாக்கிச் சூடானது இராணுவம் தனது சட்டபூர்வமான கடமைக்கு அப்பால்செயல்பட்டுள்ளதாகக் கண்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ள சாட்சியங்களை நெறிப்படுத்த வருவதாக அறியப்படுகின்றது.
0 comments

சம்பந்தர் சொல்றார் நாங்கள் என்ன செய்வது.. சித்தார்தனின் ஆதங்கம்.

வட மாகாண முதல்வர், யாரிடம் பதவிப் பிரமாணம் செய்து கொள்வது என்பது குறித்து, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் கருத்து வேறுபாடு நிலவியதாக வரும் செய்திகளில் உண்மை இருக்கிறதா? பதிலளிக்கிறார் கூட்டமைப்பின் சார்பாக வடமாகாண சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், புளட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் பிபிசி வானொலியின் தமிழ் சேவைக்கு வழங்கிய செவ்வியில் ...

வடமாகாண சபையின் உறுப்பினர்கள் இலங்கை ஜனாதிபதியின் முன்பாக சத்தியப் பிரமாணம் செய்வது தொடர்பாக கட்சிக்குள் இரு வேறு வகையான கருத்துக்கள் இருந்தாலும், வடமாகாண மக்களில் பெரும்பாலானோர் அரசுக்கு எதிராகவே வாக்களித்திருக்கிறார்கள் என்பதால், ஜனாதிபதியின் முன்பாக சத்தியப் பிரமாணம் செய்யக் கூடாது என்ற கருத்துக்கே ஆதரவு அதிகமாக இருப்பதாகவும், தாமும் அதனையே ஆதரிப்பதாகவும் சித்தார்த்தன் கூறியுள்ளார்.

ஆனாலும் சுமூகமான ஆரம்பத்தை நோக்கியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடு இருக்க வேண்டும் என்று சர்வதேச சமூகமும் ஏனைய பலரும் கேட்டிருப்பதாக இரா. சம்பந்தன் அவர்கள் கூறியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயத்தை மக்கள் உணர்வுபூர்வமாகப் பார்ப்பதால், கட்சிகளும் அதனையே பிரதிபலிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் தாங்கள் சிங்கள அரசிடம் சரணாகதி அடைந்து விட்டோம் என்ற கருத்து மக்கள் மனதில் ஏற்பட்டுவிடும் என்பதுதான் தமது கவலை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவை குறித்த அவரது முழுமையான செவ்வியை நேயர்கள் இந்த இணைப்பில் அழுத்தி கேட்கலாம்.

நன்றி பிபிசி
0 comments

ஆனந்தராஜாவுக்கு நிம்மதி அடைக்கலநாதனுக்கு தலையிடி

சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் வல்வெட்டித் துறை நகர சபையில் ததேகூ-வைச் சேர்ந்த ந. ஆனந்தராஜுக்கு அதிகூடிய விருப்பு வாக்கு கிடைத்தது. கட்சியின் நியமப்படி அதிகூடிய விருப்பு வாக்குபெற்ற ஆனந்தராஜூக்கே நகரசபைத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. ஆனால் இரண்டாவதாக வந்த முன்னொரு காலம் அதன் தலைவராக இருந்த மாஜி எம்பியான எம்.கே. சிவாஜிலிங்கம் தலைவர் பதவி தனக்கே வேண்டும் என்று அடம் பிடித்து தலைவருக்கு தேவையற்ற பிரச்சினைகளைக் கொடுத்து நகர சபையை ஒழுங்காக இயங்கவிடாது குழப்பிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் வட மாகாண சபைத் தேர்தல் வந்தது. வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் பதவி வேண்டும் கொல்லைப் புறத்தில் கொக்கரித்துக் கொண்டிருந்த அவர் வட மாகாண சபையில் போட்டியிட்டார். ஆனந்தராஜும் வல்லை மக்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர் சனியன் தொலைந்ததென்று.

ஆனால், அந்தச் சனியன் இப்பொழுது ரெலோ தலைவர் அடைக்கலநாதனைப் பிடித்துக் கொண்டது. வட மாகாண சபையில் ரெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் சார்பாக வன்னி மாவட்டத்துக்கு அமைச்சுப் பதவி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கட்சியோ அந்த அமைச்சுப் பதவியை பதவிப் பித்தரான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவாஜிலிங்கத்துக்கு வழங்கத் தீர்மானித்துள்ளது. இதனால் மனமுடைந்த கட்சித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கட்சியின் தீர்மானதுக்கு கட்டுப்பட்டாலும் வன்னி மக்களுக்கு பொறுப்புக் கூறவேண்டும் என்பதால் தனது தலைமைப் பதவியைத் தூக்கி எறியத் தீர்மானித்து விட்டார். நிச்சயமாக சிவாஜி இந்தப் பதவியையும் எட்டிப் பிடித்துவிடுவார்.

இதில் முக்கியமான விடயம் யாதெனில் தனக்கு சுகாதார அமைச்சை தரவேண்டும் என்று வேறு கேட்கிறாராம்

அடைக்கலநாதன் ரெலோவே அடைக்கலம் என்று இருந்தவர். சிவாஜியோ ஓடுகாலியாக கட்சியை விட்டோடி புதுக் கட்சி ஆரம்பித்து அது சந்தைப் படாததால் ஊதாரிப் பிள்ளைபோல திரும்பி வந்தவர்.

தங்கத்துரை, குட்டிமணி மற்றும் ஶ்ரீ சபாரட்னம் போன்ற எண்ணற்ற தியாகிகளின் ஆவிகள் இவரைப் போன்றவர்களைச் சும்மாவிடாது.
0 comments

தலைமைத்துவத்தை மாற்றுமாறு கோரி அறிவித்தல்! ரணில் நிராகரிப்பு!

தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை மாற்றுமாறு கோரி ஐக்கிய பிட்சுக்களின் முன்னணி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கூறிய வேளை, அதனை நிராகரித்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.

பிட்சுக்கள் முன்னணியின் பிரதான நிறைவேற்றுக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் பிட்சுக்கள் 12 பேருக்கும் ஐதேக தலைவருக்குமிடையே இன்று (04) இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது ரணில் விக்கரமசிங்க அவ்வாறு குறிப்பிட்டார் என தேசிய பிட்சுக்களின் முன்னணியைச் சேர்ந்த உலுபனே சுமங்கள தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட ஐக்கிய பிட்சுக்களின் முன்னணயின் கண்டி மாவட்ட செயலாளர் தல்பொத்த தம்மஜோதி தேரர், சிங்கள ஊடகமொன்றுக்கு விசேட செவ்வியொன்றை வழங்கிவிட்டுக் குறிப்பிடும்போது, வழக்கறிஞர் சிரால் லக்திலக்க, வழக்கறிஞர் மைத்திரி குணரத்ன என்போரின் தலைமையிலேயே இவ்விடயம் இடம்பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரை மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கூட்டத்திற்கு முழு அநுசரணையையும் வழங்குவதாக ஐக்கிய பிட்சுக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை மாற்ற வேண்டும் என்று விடாப்பிடியாக நிற்கின்ற ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களின் வீதி ஊர்வலம் நாளை (05) காலை தெவுந்தர ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

(கேஎப்)
0 comments

இன்றும்கூட ஜனநாயகம் பிறக்கவில்லை... பிறப்பதற்குத் துடித்துக் கொண்டிருக்கிறது...! - வாசு

சிங்கள இலக்கியத்தில், கவிதையியலில், சிறுகதையியலில் அதைப்போல சிங்கள சினிமாவில் மிகவும் கவலைக்கிடமான கதைகள் உள்ளடங்கியுள்ளன என்றும், அவற்றிலிருந்து வெளிவருகின்ற அவற்றிலிருந்து தெளிவுறுத்தப்படுகின்ற உணர்வுகள் சிங்கள சமூகத்தில் நன்கு பிரபல்யம் பெற்றவை என்றும், சிங்கள சமூகத்திலிருக்கின்ற இந்த உணர்வுகளை பொதுபல சேனாவிற்கோ ராவண பலயவிற்கோ அந்த பலயவிற்கோ இந்த பலயவிற்கோ குழப்பிவிட முடியாது என்றும் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார்.

பன்னூலாசிரியர் எம்.சீ. ரஸ்மினின் ‘ போர்க்கால சிங்கள இலக்கியங்கள்’ எனும் நூல் வெளியீட்டு விழா கொழும்பு 10 இல் அமைந்துள்ள இலங்கைத் தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது, அந்நிகழ்வின் பிரதம அதிதியாக்க் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்:

நாங்கள் சிங்களத்திலும் எழுதுகிறோம். தமிழிழும் எழுதுகின்றோம். தமிழ் பேசும் மக்கள் தமிழை வாசிக்கிறார்கள். சிங்களவர்கள் சிங்களத்தை வாசிக்கிறார்கள். எங்கள் எழுத்தாளர் சங்கம் என்னைச் சந்தித்து, ‘நாங்கள் தற்போது சிங்களத்தில் எழுதுவதை தமிழிற்கும், தமிழில் எழுதுவதை சிங்களத்திற்கும் மொழி பெயர்க்க வேண்டும்’ என்று சொன்னார்கள். அதற்காக நாங்கள் நிதியம் ஒன்றை ஆரம்பித்தோம். அதற்கு எங்கள் அமைச்சு உதவுகின்றது. நாங்கள் சிங்கள, தமிழ் எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து வடக்கிற்குச் சென்று அங்குள்ள தமிழ் எழுத்தாளர்களைச் சந்திக்கச் சென்றோம். அவர்களை அங்கு சந்தித்து மிகவும் மகிழ்ச்சியாக உரையாடினோம். நானும் சகல ஒன்றுகூடல்களிலும் கலந்து கொண்டேன்.

இன்று நாங்கள் ஜனநாயக சமூகமொன்றைக் கட்டியெழுப்பும் தேவைப்பாட்டில் உள்ளோம். ஜனநாயக சமுதாயமொன்றை கட்டியெழுப்புவதற்கான ஒருவகை களைப்பையை இன்று நாங்கள் காண்கிறோம். இன்று இன்னும் ஜனநாயகம் பிறக்காமல் துடித்துக் கொண்டிருக்கிறது.... ஆயினும் இன்னும் பிறந்தபாடில்லை. தற்போது நாங்கள் அதற்குத் தேவையான தகுதிகளைப் பெற்றிருப்பதாக நான் நினைக்கிறேன். போரின் அழிவு தொடர்பான அனுபவம் ஒருவகையில் தகுதியாக இருக்கின்றது.

தற்போது மூளை தெளிவாகியுள்ளது. இவ்வளவு மனிதர்களை கொன்றொழித்து, இவ்வளவு உடைமைகளை அழித்தொழித்து எதனைக் கண்டோம் என்று இப்பொழுது சிந்திக்கிறார்கள். இனியாவது நாங்கள் ஜனநாயக சமுதாயமொன்றைக் கட்டியெழுப்புவோம். இலங்கையை ஒருமைப்படுத்துவோம். இலங்கை ஒருமைப்படுத்தப்படாதவிடத்து ஒருபோதும் இலங்கை எந்த புதுமையை (ஆச்சர்யத்தையும்) நோக்கியும் நகர முடியாது. இலங்கையில் ஒருமை மலர்வது ஆச்சர்யத்துக்கான அத்திவாரமாகும். அதனால் இலங்கையை ஒருமைப்படுத்த இலங்கையின் சகல இடங்களிலிருந்தும் ஆவன செய்ய வேண்டும். இலங்கியக் கலை அவற்றில் பிரதான அங்கம் வகிக்கும் என்று உறுதியாக நான் கூறுகின்றேன்... என்றும் குறிப்பிட்டார்.

(கலைமகன் பைரூஸ்)
0 comments
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tesxxx - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger