மகனை முதலமைச்சராக்கும் பிரதமர் தி. மு. ஜயரத்னவின் கனவுக் கோட்டை தகர்ந்தது.

மத்திய மாகாண சபைத் தேர்தலில் வெற்றியீட்டிய ஆளுங்கட்சியில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவரான பிரதமரின் மகன் அனுருத்த ஜயரட்னவுக்கு முதலமைச்சர் பதவியோ வேறு அமைச்சர் பதவியோ வழங்கப்படவில்லை. அதே போல வட மேல் மாகாண சபையில் இரண்டாவது அதிகூடிய வாக்குகளைப் பெற்ற அமைச்சர் ஜோண்ஸ்டன் பெர்ணான்டோவின் மகன் ஜொகான் பெர்ணாண்டோவுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

அதேவேளை, வடமேல் மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அதுல விஜேசிங்க தான் மாகாண சபையில் பதவி எதையும் கோரவில்லை என்று கூறியுள்ளார்.

மறைந்த ஜனாதிபதி பிரேமதாச பிரதமராக இருக்கும் போது கூறினார் ஜனாதிபதி நிர்வாக முறையில் பிரதமர் பதவி பியோன் பதவிக்குச் சமமானது என்று. அது உண்மைதான். பாவம் இன்றைய பிரதமர் தி.மு.ஜ.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tesxxx - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger