வடகிழக்கின் இளைஞர்களை வெடிகுண்டுகளை கட்டி போர் முனைக்கு அனுப்பி விட்டு புதுக்குடியிருப்பில் நிலக்கீழ் மாளிகை ஒன்றைக்கட்டி தனது மனைவி மக்கள் உற்றார் உறவினருடன் சுகபோகம் அனுபவித்து வந்தார் பிரபாகரன். இவரது இந்த நிலக்கீழ் மாளிகை இராணுவத்தினரின் கையில் வீழ்ந்தது. இந்த மாளிகையை மக்கள் கடந்த காலத்தில் சென்று பார்வையிட்டும் வந்தனர். இந்த மாளிகை இன்று இராணுவத்தின் பொறியியல் பிரிவினரால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்தின் தடயங்களை அழிக்கும் நோக்குடன் புலிகளுக்கு சொந்தமான பல்வேறு தடயங்கள் கடந்த காலங்களில் அழிக்கப்பட்டமை யாவரும் அறிந்தது.
ஆனாலும் குறித்த பிரதேசத்தில் கன்னிவெடிகள் அகற்றும் பணிகள் நிறைவேறாது பிரபாகரனின் மாளிகைக்கு குண்டு வைத்து தகர்க்குமிடத்து அக்கன்னிவெடிகள் அதிர்சியினால் வெடிக்கும் என்ற காரணத்தினால் இதுவரை காலமும் இச்செயற்பாடு தாமதமாக இருந்தாக அறியக்கிடைக்கின்றது.
Post a Comment