வறிய மாணவர் விடுதிக்கு அழுக்குத் தண்ணீர்

மிகவும் வறிய நிலையில் பின் தங்கிய பிரதேசங்களில் இருந்து வந்து மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா வித்தியாலயத்தின் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகள் அழுக்கடைந்த நீரைப் பருகி பாதிக்கப்பட்டுள்ளார்கள். இது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கல்வித் திணைக்களத்திடம் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திங்கட்கிழமை காலை சுகவீனம் காரணமாக பாதிக்கப்பட்ட குறித்த பாடசாலை மாணவர்கள் ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இது தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

விடுதியில் உள்ள மாணவர்கள் தொடர்பில் குறித்த பாடசாலை நிர்வாக ம் கவனத்தில் கொள்ளாமல் செயற்படுவதே இதற்கு காரணம் எனவும் குற்றஞ்சாட்டப்படுகின்றது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tesxxx - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger