அதிவேகப் படகில் ராமேஸ்வரம் வந்த ஈழத் தமிழரால் பரபரப்பு!

இலங்கையில் இருந்து தீவிரவாதிகள் கடல்வழியே ஊடுருவி தமிழகத்தில் தாக்குதல் நடத்தக் கூடும் என்று அண்மையில் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து கடற்பரப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த கடும் பாதுகாப்பை மீறி ராமேஸ்வரம் அருகே அதிவேகப் படகில் சென்று இறங்கிய ஈழத் தமிழர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது அதிவேகப் படகு ஒன்றில் ராமேஸ்வரம் அருகே மர்ம நபர் ஒருவர் சென்றிறங்கியதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது அங்கு பதுங்கியிருந்த இலங்கை மன்னார் - பேசாளையைச் சேர்ந்த செல்லகிருஷ்ணன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தாம் திருச்சியில் தங்கியிருப்பதாகவும் அடிக்கடி இலங்கைக்கு கடல்வழியே படகில் சென்று வந்ததாகவும் தெரிவித்துள்ளார் இதனையடுத்து கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் கடற்படைக்கும் கூட தெரியாமல் அதிவேகப் படகு ஊடுருவியது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tesxxx - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger